Spread the love

தூத்துக்குடி ஜன, 8

புரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான 31.6 லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசாண முத்துவின் வீடு மழை வெள்ளத்தில் சேதம் ஆகியுள்ளது. இது குறித்து பேசிய அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தன்னால் முடிந்த உதவியை செய்ய உள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *