சென்னை டிச, 23
தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. 2018-19 கல்வி ஆண்டில் 28.4 சதவீதமாக இருந்தது. 2020-21ஆம் கல்வியாண்டில் 20.6 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக ஒடிசா 49.9% மற்றும் பிஹார் 42.1% உடன் மிக மோசமான நிலையில் உள்ளன. 10 சதவீதத்திற்கும் குறைவான மாநிலங்கள் வரிசையில் தமிழகம் ஒன்பது சதவீதம் என்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.