நாகப்பட்டினம் டிச, 10
காரைக்கால் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 25 மீனவர்கள் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை சிறை பிடித்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதன் பின்னர் 25 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.