திண்டுக்கல் டிச, 9
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போல் கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.