செங்கல்பட்டு டிச, 8
புயல் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம், வண்டலூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை. அதே போல் திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.