சேலம் நவ, 22
சேலம் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை உடனடியாக ஊழியர்கள் வெளியேற்றினர்.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.