வேலூர் நவ, 16
நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தவறு இழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதனை தடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வைப்பு நிதி பங்களிப்பு தொகையை செலுத்தாத நிறுவனங்களிடம் இருந்து சட்டபூர்வ நிலுவை சொந்தமான அசையும் அசையா தொகையை வசூலிக்க வரும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் மேலூர் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு பகுதியின் கீழ் உள்ள நிறுவனங்களில் வைப்பு நிதி பங்களிப்புகளை செலுத்த தவறியவர்கள் மீது மீதான மீட்பு சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.