Spread the love

கோவை நவ, 14

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பைத் தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.

தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தை விட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் 1350 டன் குப்பை சேர்ந்தது. இந்த குப்பைகளை நேற்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *