Spread the love

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 21

ஓசூர் முல்லைநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சீதாராம்நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் , மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 536 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்கள்.

இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், தலைமை ஆசிரியர்கள் அலெக்சாண்டர், தேவசேனா, புனித ஜான் போஸ்கோ பள்ளி தாளாளர் ஆஞ்சலா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர்கள் மகேஷ்பாபு, அப்துல் முஜீப், முன்னாள் தலைவர் ரெட்டி, ஆசிரிய, ஆசிரியைகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *