சென்னை அக், 26
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஏற்கனவே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. எனவே விடுபட்ட தொகை வரும் ஒன்றாம் தேதி சம்பளத்துடன் கூடுதலாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதனால் அரசுக்கு ரூ.2546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.