புதுக்கோட்டை அக், 10
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ரூ.1000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு இணைய கோளாறு காரணமாக இவ்வாறு பலருக்கு செய்திகள் சென்றுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.