சென்னை அக், 6
கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை(16.38 டிகிரி செல்சியஸ்) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரப்போவதில்லை அது ஏற்கனவே நிகழத் தொடங்கிவிட்டது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று பருவநிலை கண்காணிப்பு அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.