கொடைக்கானல் அக், 1
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இதன் காரணமாக மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இரவு நேரத்தில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.