புதுடெல்லி செப், 25
நாட்டு மக்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மை பணியில் நடந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1 காலை 10 முதல் 11 மணி வரை நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி பிரத்தியேகமாக அழைப்பு விடுத்துள்ளார்.