சென்னை செப், 6
சனாதனம் ஒழியும் வரை தனது குரல் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .தனது தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த சாமியார் தனக்கு ரூ.500 கோடிக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 9 வருட ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதா கட்சி எதுவும் செய்யாததால் பேசுவதற்கு ஒன்றுமில்லை முழுக்க முழுக்க கலவரத்தை தூண்டி விடுவதாகவும் விமர்சித்துள்ளார்.