சென்னை ஆக, 23
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்படாததால் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழாது என்றார்.