புதுடெல்லி ஆக, 14
டெல்லியில் 2 நாள் மெகா விற்பனையில் 71 ஆயிரத்து 500 கிலோ தக்காளி மானிய விலையில் விற்கப்பட்டதாக என்சிசிஎஃப் தெரிவித்துள்ளது. டெல்லியின் 70 பகுதிகளில் கிலோ ரூபாய்70 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி 36 ஆயிரத்து 500 கிலோவும் 13ம் தேதி 35,000 கிலோவும் விற்பனையானது. வடமாநிலங்களில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தக்காளி வரத்து இல்லாததால் விலை உயர்ந்துள்ளது.