சென்னை ஆக, 14
எந்த காரணமும் இன்றி தமிழகத்தில் தற்போது சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உறுப்பு மாற்று ஆணைய செயலர் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இது குறித்து பேசிய அவர் “சிறுநீரகம் பாதித்தவர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது 50 சதவீதம் நோயாளிகளுக்கு எந்த காரணமும் இல்லை விவசாய பணியாளர்கள் பாதிக்கப்படுவதால் ஐந்து வேளாண் மண்டலங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளன” என்றார்.