தர்மபுரி ஆக, 3
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரிக்கும், வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆடிப்பெருக்கையொட்டி மற்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமை ஆசிரியர்களை முடிவெடுக்கலாம்.