Spread the love

கீழக்கரை ஜூலை, 13

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமைப் பொறுப்பேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் திரு அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவர் பேசுகையில்:-

ஒவ்வொரு மாணவரும் தன்னுள் இருக்கின்ற தனித்தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டுவிட முடியும். நீயா நானா என்று போட்டியிடுவதைவிட நீயும் நானும் என வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம்.நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும். ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் உங்களது கனவு நனவாகும் என மாணவ மாணவியரிடையே உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவியும் ராமநாதபுரம் தடவியல் துறையின் சார்பு ஆய்வாளருமான வினோதாவும் கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே தன்னம்பிக்கை விடா முயற்சி புகையிலை மற்றும் போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு செந்தில் குமார் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை முதன்மையர் செல்வ பெருமாள் மற்றும் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு சேக் தாவூத் உட்பட பலர் கலந்து மாணவ மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வ கணேசன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஜஹாங்கீர்.

மாவட்ட நிருபர்.

கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *