சென்னை ஜூலை, 12
பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் 14ம் தேதி பொதுமக்கள் மத அதை அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை சுமார் 46 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக சட்ட ஆணையம் கூறியுள்ளது.