வேலூர் ஆகஸ்ட், 16
குடியாத்தம் அடுத்த கேஎம்ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பில் 75ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா நடைபெற்றது. பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகள் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விழா ஏற்பாடுகளை உடற்கல்வி பேராசிரியர்கள் ரஞ்சிதம், ஞானக்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திருமகள், ராஜீவ் ஆகியோர் செய்து இருந்தனர். மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.