மெக்சிகோ ஜூன், 19
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று மாலை பசுபிக் பெருங்கடலுக்கு கீழே பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பெருத்த பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.