சென்னை ஜூன், 11
சென்னை முழுவதும் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குடிநீர் வாரியம் டோல் ஃப்ரீ எண் முறையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.