Spread the love

துபாய் மே, 30

ஐக்கிய அரபு அமீரகத் ஷார்ஜா சஃபாரி மால் உள்ளரங்கில் எழுத்தாளர் ஜெஷீலா பானு மற்றும் டிக்டாக் சமூக ஆர்வலர் பெனாஸிர் அபூபக்கர் இணைந்து நடத்திய தமிழா தமிழா என்ற கலைநிகழ்ச்சி ஆர்ஜே அஞ்சனா தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல், ஜோடிகளுக்கான போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியரும் தினகுரல் நாளிதழின் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, கல்ப் கட்ஸ் பிரவீன் ஜோய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிடட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு டான்ஸ் நடுவராக டேவிட் பூன் மற்றும் பாடல் நடுவராக பல்லவியும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெனாஸிர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *