கம்போடியா மே, 29
கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர் இந்தியா வருவது கடந்த அறுபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக 1963ம் ஆண்டு தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹோனோக் இந்தியா வந்தார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் மன்னர் நாரோடம் சிஹாமோனி இந்தியா வருகிறார்.