சென்னை மே, 13
ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவாகும். கொரோனாவுக்கு பின் அச்சடிக்கப்பட்ட அதிகப்படியான ரூபாய் நோட்டுகளால் பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் அதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தி வந்தது. தற்போது பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்து இருப்பது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.