சென்னை மே, 10
+2 துணைத் தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியான தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளதால் அவர்கள் நாளை முதல் மே 17 வரை பள்ளிகள் அரசு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.