ஈரோடு ஏப்ரல், 23
சிக்கித் தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப் போகிறது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.