Spread the love

கோவை ஏப்ரல், 21

கோவை, தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும். பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும். 3 ஆண்டு போனஸ், இதர பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ், ஏ.டி.பி, சி.ஐ.டி.யு.ஐ, என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு, சி.எம்.எல். எஃப், டாக்டர் அம்பேத்கர் என்.டி.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *