மயிலாடுதுறை ஏப்ரல், 17
சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் மேற்கு வாசல் கோபுரம் அருகே சிலைக்கு மண் எடுக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 55 பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலுக்கு விரைந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.