காஞ்சிபுரம் ஏப்ரல், 12
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இது 386 ஆக இருந்த நிலையில், அது சற்று அதிகரித்துள்ளது. மேலும் வீடு மற்றும் மருத்துவமனையில் 2,301 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.