சென்னை ஏப்ரல், 4
தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.