சென்னை ஏப்ரல், 2
தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச் 29 அன்று ஒரே நாளில், ஓட்டுநர் பயிற்சி புதிய வாகனப் பதிவு, வாகன தகுதி என 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் நடத்திய ஆய்வு எதிரொலியாக வட்டார போக்குவரத்து அலுவலர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.