Spread the love

செங்கல்பட்டு ஆகஸ்ட், 14

உலகம் ஸமுழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைறுகிறது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இன்று முதல் 15 ம்தேதி வரை ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பார்வையாளர்களுக்கென சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் இவ்விழாவில் திருவள்ளுவர் சிலை வடிவில் பட்டம் பறக்க விட்டனர். மேலும் பல்வேறு வடிவிலான சிறிய மற்றும் ராட்சத பட்டங்களை வானத்தில் பறக்க விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *