Spread the love

நெல்லை ஆகஸ்ட், 13

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்க உள்ளனர் நேற்று இரவு ஆண்கள் பிரிவில் நடந்த விளையாட்டு போட்டியில் கூடங்குளம் அணியும், குஜராத் அணியும் விளையாடியது.
இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. கூடங்குளம் அணி 29 புள்ளிகள் பெற்றது.பெண்கள் அணியில் குஜராத் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் விளையாடியது.

இதில் குஜராத் அணி 27 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. அமெரிக்க கல்லூரி அணி 26 புள்ளிகள் பெற்றது. நேற்று மாலையில் வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி சரவணகுமார், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிகளை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், நெல்லை மேயர் சரவணன், உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் நாளை 14 ம் தேதி ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடை பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *