கோவை மார்ச், 21
வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூறாய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. தொடர்ந்து வெளியான உடற்கூறாய்வில் வெடி மருந்தை யானை கடித்த போது அதன் தாடை, பற்கள் சேதம் அடைந்துள்ளது. அதனால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.