சென்னை மார்ச், 20
இன்னும் தீண்டாமை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருவதாக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். தீண்டாமை கொடுமையால் இன்னும் சிலர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவது மறுக்கப்படுகிறது. இதில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தீண்டாமை உள்ளது இதற்கு முடிவு கட்ட வேண்டும் எதிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.