Spread the love

விழுப்புரம் ஆகஸ்ட், 13

திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு அவர் திண்டிவனம் மருத்துவமனையில் ரூ. ஆறு கோடியே எண்பத்தேழு லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனா் சண்முககனி, திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், ரமணன், கண்ணன், வட்டாட்சியர் வசந்த கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *