துபாய் ஜன, 24
ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள உட்லம் பார்க் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் காலையில் ஆரம்பித்து இரவு வரை பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல், சிலம்பாட்டம் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு ஜெகநாதன் மற்றும் அருணா வீரராகவன் தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், அரவிந்த் குழும நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகர், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், A2B ராஜு, கீழக்கரை ஷாஹுல் ஹமீது, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்கம் பாலு, உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.