Spread the love

அரியலூர் ஜன, 20

ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் 143 பயனாளிகளுக்கு அனைத்து துறை திட்டத்தின் மூலம் ரூ.34.55 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஆனந்தன், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் தீபாசங்கரி, அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *