ஈரோடு ஜன, 19
அதிமுக உடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து போட்டியிட உள்ளது இதற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.