திண்டுக்கல் ஜன, 12
திண்டுக்கல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கவர்னரை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு உருவபடம் எரிப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் உருவ படம் எரிப்பு போராட்டத்தை கைவிடும்படி நிர்வாகிகளிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவணா தலைமை தாங்கினார். இதில் மாநில பிரசார பிரிவு துணை செயலாளர் துரை சம்பத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், நகர தலைவர் சுப்பிரமணி, நகர அமைப்பாளர் பாலா மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.