Spread the love

கரூர் ஜன, 7

கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கனிம வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குவாரி அமைவிடம் குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர். அப்போது கே.பிச்சம்பட்டியை சேர்ந்த கிராம மக்களுக்கு இக்கூட்டம் குறித்து முறையாக தெரிவிக்கபடவில்லை என்றும், குவாரி அமைய உள்ள கிராமத்தில் கூட்டத்தை நடத்தாமல் வெள்ளியணையில் நடத்துவதற்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளும், இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *