Spread the love

திண்டுக்கல் ஜன, 8

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9 ம்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

இதைத் தொடர்ந்து ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,105 ரேஷன்கடைகளுக்கும் கரும்பு அனுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு ரேஷன்கடையிலும் ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. அவை ரேஷன்கடை பணியாளர்கள் முன்னிலையில் இருப்பு வைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *