Spread the love

காஞ்சிபுரம் ஜன, 5

காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில், குண்டுகுளம் ஊராட்சியில் குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில், குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் குடியிருப்புகளும் என மொத்தம் ரூ.19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

இந்த பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே முன்னதாக ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் தரமற்று இருப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் ஆர்த்தி காண்டிராக்டரை கண்டித்தார். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக கட்டுமான பணி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார். இதேபோல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *