சென்னை ஜன, 4
பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம் என கூறப்பட்டுள்ளது.