Spread the love

செங்கல்பட்டு ஜன, 1

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் பதிவாகும் வகையில் நேஷனல் மொபைல் மானிடரிங் சிஸ்டம் ஆப் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் (தனிநபர் திட்ட பணிகள் தவிர) இணையதளத்தில் பதிவாகும் வகையில் வருகையை பதிவு செய்தல் வருகிற 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *