ஜப்பான் டிச, 30
ஜப்பானில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன் பின்னர் பல்வேறு மாகாணங்களுக்கு பரவியது. தற்போது வரை 70 லட்சத்திற்க்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பறவைக் காய்ச்சல் பரவிய பகுதிகளில் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.