பிலிப்பைன்ஸ் டிச, 29
பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானொர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.